புதன், 9 ஜூன், 2010

உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை பெருகுகிறது

வியட்நாமில் நாத்திகர்கள் 81 விழுக்காடு

சென்னை, ஜூன் 9_ உலகில் கடவுள் மறுப்பா-ளர்-களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது என்று அறிவியல் தகவல்கள் கூறுகின்றன.

670 கோடி மக்கள் வாழும் இவ்வுலகில் 50 முதல் 75 கோடி மக்கள்வரை கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர். கடந்த பத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் புள்ளி விவரங்களிலிருந்து தொகுக்கப்பட்டது இந்த மதிப்பீடு.

இந்தப் போக்கு எதைக்காட்டுகிறது? அமெரிக்கா உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் நாத்திகமும் வளர்ந்து வருவதாக கலிபோர்னியா பிட்சர் கல்லூரியின் பேராசிரியர் பில் ஜுகர்மேன் கூறுகிறார். வளர்ச்சி பெறாமல் பின் தங்கி உள்ள நாடுகளில் மதம் இன்னும் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக இருப்ப-தால், உலக அளவில் நாத்திகம் வளருவது என்ற இந்த போக்கு பின்னடைவையே பெற்றுள்ளது எனக் கூறலாம். இந்த நாடுகளில்தான் மக்கள் தொகை அதிகமாக இருப்பதுடன், வளர்ந்த நாடுகளை விட மக்கள் தொகைப் பெருக்கமும் இந்த நாடுகளில்தான் விரைவாகவும் உள்ளது என்பதே இதன் காரணம்.

நாத்திகர்களும் (Atheists), கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிய கருத்து அற்றவர்-களும் (Agnostics) அதிகமாக வாழும் 10 நாடுகள்:

1. ஸ்வீடன் 46_85 விழுக்காடு

2. வியட்நாம் 81 விழுக்காடு

3. டென்மார்க் 43_80 விழுக்காடு

4. நார்வே 31_72 விழுக்காடு

5. ஜப்பான் 64_65 விழுக்காடு

6. செக் குடியரசு 54_61 விழுக்காடு

7. பின்லாந்து 26_80 விழுக்காடு

8. பிரான்ஸ் 43_54 விழுக்காடு

9. தென்கொரியா 30_-52 விழுக்காடு

10. எஸ்டோனியா 49 விழுக்காடு

பல காரணங்களை முன்னிட்டு இந்த புள்ளி விவரங்களை மிகச் சிறந்த மதிப்பீடுகள் மட்டுமே எனக் கூறலாம். மேற்கு அய்ரோப்பாவின் வளர்ச்சி பெற்ற நாடுகள், வட அமெரிக்கா மற்றும் சில நாடு-களைத் தவிர வேறு நாடுகளில் பெரும் அள-விலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரடியாக மக்கள் பதில் அளிக்கத் தயாராக இருப்பதில்லை. சில நேரங்களில் பதில் அளிக்கவும் மறுக்கின்றனர் என்றும் கூறலாம். கடவுள் என்பதில் முழுமை-யான நம்பிக்கை இல்லை (absolutely not believe in god) என்றோ, நான் மதத்தில் இல்லை (I am not into religion) என்று அவர்கள் பல்வேறு சொற்-றொடர்களைப் பயன்படுத்துகின்றனர். என்றாலும் இந்தப் புள்ளிவிவரங்கள் ஏறக்குறைய ஒரு சரியான மதிப்பீட்டை அளிக்கின்றன.

நாத்திகர்கள் வழக்கமாகவே இளைஞர்களாக, ஆண்களாக, அதிகம் படித்தவர்களாக, சரியான தேர்வை ஆதரிப்பவர்களாக, பெண்உரிமை ஆதர-வாளர்களாக, உடலை வருத்தும் தண்டனைகள் அளிப்பதற்கு எதிரானவர்களாக இருக்கின்றனர் என்பதை மக்கள் தொகை இயல் ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்தியர்களில் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே கடவுள் நம்பிக்கை அற்றவர்-களாக உள்ளனர் என்று 2004 இல் மேற்கொள்ளப்-பட்ட பி.பி.சி. ஆய்வு ஒன்று தெரிவிப்பதாகவும், இந்தி-யர்களில் 5 விழுக்காடு கடவுள் நம்பிக்கை அற்ற-வர்கள் என்று நோரிஸ் மற்றும் ஈங்கில்-ஹார்ட் என்னும் இரண்டு பிரிட்டிஷ் ஆராய்ச்சி-யாளர்கள் கண்டுள்ளனர் என்றும் ஜூகர்மேன் குறிப்பிடுகிறார். 88 விழுக்காடு மக்கள் தொடர்ந்து முறையாக தொழுவதாகவும் அவர்கள் குறிப்பிட்-டுள்ளனர்.

அய்ரோப்பாவில் நாத்திகம் பரவலாக நிலவுவதாக தோன்றுகிறது. பிரெஞ்சுக்காரர்களில் 33 விழுக்காடும், டச்சுக்காரர்களில் 27 விழுக்-காடும், பெல்ஜியத்துக்காரர்களில் 27 விழுக்காடும், ஜெர்மானியர்களில் 25 விழுக்காடும், பிரிட்டிஷ் காரர்களில் 20 விழுக்காடும் கடவுள் நம்பிக்-கையோ எந்த ஒரு ஆவி அல்லது வாழ்க்கையை இயக்கும் சக்தி இருப்பதில் நம்பிக்கையோ அற்றவர்கள் என்பதை 2005 இல் அய்ரோப்பா பற்றி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை தெரிவிக்-கிறது. ஸ்கான்டிநேவிய மக்களில் அதிக எண்-ணிக்கை கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை அற்ற-வர்களாக உள்ளனர். அமெரிக்காவில் நாத்தி-கம் மிகவும் பிரபலமடைந்து வருதாக பல ஆய்வு-கள் தெரிவிக்கின்றன. 2007 இல் பியூ ஆய்வின்படி 5 விழுக்காட்டினரும், 2008 ஹாரிஸ் கணக்கெடுப்-பின்படி 19 விழுக்காட்டினரும் தங்களை நாத்தி-கர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

- சுபோத் வர்மா-
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா 5.6.2010
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

நன்றி-விடுதலை 09 06 10