ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மறுபிறப்பா?





சைலர்ட் (CYLERT) என்ற வணிகப் பெயருள்ள மருந்து ஒன்று விலங்குகளின் கற்கும் திறன்களை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இதை உருவாக்கி உள்ளவர்கள் அய்க்கிய அமெரிக் காவைச் சேர்ந்த அபட் ஆய்வகத் தார் (லேபரட்டரீஸ்). நினைவுத் திறனுக்கு ஆர்என்ஏ ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக் னீசியம் பெமோலைனின் செயல் பாட்டால் மூளையின் நரம்பணுக் களில் ஆர்என்ஏ அதிக வேகமாக உருவாக்கப்படுகிறது. இந்த அதி கரித்த வேகமே, இம்மருந்தால் நினைவுத்திறன் அதிகரிப்பதற்கு காரணம் என கருதுகிறார் டாக்டர் கிளாஸ்கி .

மறுபிறவி பற்றி ஆய்வு நடத்தும் நம்மூர்க்காரர்களுக்கு இந்த செய்தி மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடும். நம் பையன் களுக்கும் பெண்களுக்கும் சைலர்ட் கொடுப் பதன் மூலம், அவர்கள் தம் முற்பிறவிகள் பற்றி அதிகமதிகம் நினைவுகூர உதவ முடியும். சைலர்ட்டை கூடுதலாக கொடுப்ப தன்மூலம் பெரியவர்கள்கூட தம் முற்பிறவி நிகழ்ச்சிகளை நினைவு கூரச் செய்ய முடியும்.

மூளை நரம்பணுக்களில் உள்ள ஆர்என்ஏ மூலக்கூறுகள்தான் நினைவுத் திறனின் அடிப்படை ஆகும். என்றால், சாவுக்குப்பின் மூளை சிதைந்த பிறகு நினைவு மட்டும் எப்படி தங்கி இருக்க முடியும்? அப்படியானால் முற் பிறவிகளின் நினைவுகள் என அடிக்கடி கூறப்படும் கதை களுக்கு இனி நாம் என்ன மதிப்பு தர முடியும்?

மூன்று ஆண்டு எட்டு மாதம் வயதான சிறுபெண் ஆலிவ் சாமலதா ரஞ்சிபிரேமா, தன் முற்பிறவியில் தனக்கு பெற்றோ ராக இருந்தவர்களின் வீட்டை சுட்டிக் காட்டியதும் அவளது இப்பிறவிப் பெற்றோருக்கு முதலில் பிரமிப்பே ஏற்பட்டது. அந்த வீட்டில்தான், தன் தாய் தந்தையர் வசித்தனர் என்று அவர்களிடம் அவள் கூறினாள். இன்னொரு நாள் ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி, தன் முந்திய பிறவியில், தான் அவளைப் போல்தான் இருந்ததாக தெரிவித்தாள். (த.சன்).

உள்ளூரைச் சேர்ந்த ஒரு சிறுமி, தேகிவாலா விலங்குக் காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளில் ஒன்றை சுட்டிக் காட்டி தன் முந்திய பிறவியில், தான் அதைப் போலவே இருந்த தாகக் கூறும் சுவையான கதையைக் கேட்க இன்னும் நாம் காத்துக் கொண்டிருக் கிறோம்! தன் முற்பிறவியில், தான் ஒரு விலங்காக இருந்த தாக தன் நினைவுகளில் இருந்து கூர்ந்து கூற முடிகிற ஒரே ஒரு குழந்தையைக்கூட இன்னும் நம் மறுபிறப்பு ஆராய்ச்சிக்காரர்கள் எவரும் சந்திக்க முடியாதது ஏனோ?

மறுபிறப்பு பற்றி விளக் கங்கள் அளிப்போரிடம் நாம் கேட்பது என்னவென்றால், ஆலிவும் முன்பிறப்பில் அவள் யாரைப் போல் இருந்தாளோ அந்த மற்ற பெண்ணும் ஒரே பிறவியில் பிறக்க முடிந்தது எப்படி? அப்படியானால் ஒரே ஆளே, அவர் இறந்தபின் இரட் டைப் பிறவிகளாய் அன்றி இரண்டு வெவ்வேறு ஆள் களாக திரும்பப் பிறப்பது சாத் தியமா?

டாக்டர் ஏ.டி.கோவூர்

நாஸ்திகத்தின் நன்மை

ம.சிங்காரவேலு


நாஸ்திகத்தின் நன்மையைச் சற்று நோக்குவோம். இது விஷயமாகப் பிராட்லா என்பார் (Humanity’s gain from unbelief) என்ற நூலில், நாஸ்திகத்தில் உலகமடைந்து வரும் நன்மைகளை விளக்கியுள்ளார். இங்கு அதனைச் சுருங்க உரைப்போம்.

1. அடிமைத்தனம், (Slavery) அதாவது மக்களை விலங்குகளைப்போல் விற்கவும், வாங்கவுமான ஸ்தாபனம் நாஸ்திகத்தால் ஒழிக்கப்பட்டது. எல்லா மதங்களும் அதனை ஆதரித்தும் பாராமுகமாய் இருந்தும் வந்தன.

2. நோய்கள் (Disease) பேய் பிசாசுகளால் (Evil Spirit) உண்டாவதாக நினைத்துவந்த மூடநம்பிக்கை மிகுதியாக உலகம் முழுமையும் ஒழிந்தது. இந்த மூடநம்பிக்கையை மதங்கள் வளர்த்து வந்தன.

3. தெய்வமாடுதல், குறி சொல்லுதல், ஜோசியம் முதலிய பித்து வழக்கங்கள் நாஸ்திகத்தால் குறைவுற்றன.

4. பிசாசு பிடித்தவர்களென்று மந்திரக் காரர்களையும் பைத்தியக்காரர்களையும் கொன்று இம்சிக்கும் பழக்கத்தை நிறுத்தியது நாஸ்திகமே.

5. அபிப்பிராய வித்தியாசத்தால் நேரிடும் கொலைகள் குறைந்து வருவதும் நாஸ் திகத்தால்தான்.

6. பஞ்சம், தரித்திரம், வறுமை முதலிய கஷ்டங்கள் கடவுள் கோபத்தால் உண்டாவதாக எண்ணிவந்த மூடநம்பிக்கை ஒழிந்ததும் நாஸ்திகத்தால்தான்.

7. கொடுங்கோல் மன்னர் ஆணவத்தை அடக்கி வருவதும் நாஸ்திகமே.

8. சுதந்திரம், சமத்துவம், முதலிய தாராள நோக்கங்கள் உலகில் பரவி வருதல் நாஸ்திகத்தால். (Question Not) கேட்காதே என்ற ஆணவத்தை எதிர்த்து விசாரிக்கும் மனப்பான்மையை வளர்ப்பதும் நாஸ்திகமே.

9. அக்கிரமம், அநியாயம், அறியாமை, தயை தாட்சண்யமின்றி ஒழிக்கப்பட்டு வருவதும் நாஸ்திகத்தால் தான்.

10. கோடானுகோடி பசித்து வருந்திக் கிடக்கும் மக்களுக்கு மூடப்பழக்கங்களி லிருந்து எழுங்கள். ஊக்கத்தையும், தைரி யத்தையும் கைவிடாதீர்கள். உலகிற்கும், உங்களுக்கும் பொருளாதாரத் தாழ்வால் வந்திருக்கின்றது கேடு. அதனைப் போக்கி உலக முழுமையும் களஞ்சியமாகும் கல்வி யும், சாந்தமும், சமாதானமும், நிலவச் செய் யுங்கள் என்று கூவி அழைப்பதும் நாஸ் திகமே.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சண்டை!



அனைவரையும் படைத் தவர் கடவுள் என்கின்றனர் அப்படிப் பார்க்கும்பொழுது கடவுள் அனைவருக்கும் தகப்பன் ஆகிறார்.

உண்மையான தகப்ப னார் தன் பிள்ளைகளை வேறுபடுத்திப் பார்ப்பாரா? அப்படிப் பார்த்தால் அவர் யோக்கியமான தகப்பனாகத் தான் மதிக்கப்பட முடியுமா?

நாட்டில் என்ன நடக் கிறது. ஒரு கட்டத்தில் கோயி லுக்குள் தாழ்த்தப்பட்டவர் கள் போகக்கூடாது என்று தடை போட்டார்கள். அதற் காகப் போராட்டம் நடத்தப் பட்டு, அந்த உரிமை கிடைக்கப் பெற்றது.

குறிப்பிட்ட ஜாதியினர் தான் சாமியைத் தொட முடியும், குளிப்பாட்ட முடியும், பூஜை செய்ய முடியும் என்று சுவர் எழுப்பி வைத்தனர்.

அதனை உடைக்க அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் சட்டம் திராவிடர் கழகத்தின் முயற்சியால், தி.மு.க. ஆட்சி யில் இயற்றப்பட்டு, அனைத்து ஜாதியினருக்கும் 69 சத விகித இட ஒதுக்கீடு அடிப் படையில் பயிற்சியும் அளிக் கப்பட்டு, இந்துக் கோயில் கருவறைக்குள் இந்து மதத் தைச் சேர்ந்த எந்த ஜாதி யினரும் அர்ச்சகராக ஆணை பிறப்பிக்கப்படவி ருந்த ஒரு காலகட்டத்தில், அதனையும் எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டனர் பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாகத் தங்களுக்குத் தாங்களே எழுதி வைத்துக் கொண்ட பார்ப்பனர்கள்.

ஏடுகளில் ஒரு சேதி இன்று வந்தது. பண்ருட்டி வட்டம் பல்லவராயநத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு முத்துமாரியம்மன் சாமி ஊர்வலம் செல்லத் தடையாம்.

கோயிலுக்குமுன் வைக் கப்படும் மரத்தால் ஆன முத்துமாரியம்மனை வேண்டு மானால் தாழ்த்தப்பட்டவர்கள் கும்பிட்டுத் தொலையலாமாம். சாமி சிலையில்கூட மற்றவர் களுக்கு உலோகத்தால் ஆனது; தாழ்த்தப்பட்டவர் களுக்கு மரத்தால் ஆனதாம்.

அடேயப்பா, இந்தக் கடவு ளைப்பற்றி எப்படி எப்படியெல் லாம் குலுக்கி மினுக்கி எழுதித் தள்ளியுள்ளார்கள்? அன்பே உருவானவர் காருண்ய மூர்த்தி, சகல உயிர்களையும் படைத்த சக்தி படைத்தவர் உருவமற்றவர் அரூபி என்று ஒரு பக் கத்தில் கிறுக்கி வைத்து விட்டு, இன்னொரு பக்கத் தில், கடவுளுக்கு உருவம் வைத்து பெண்டாட்டி, வைப் பாட்டிகள் என்று ஏற்பாடு செய்து, குழந்தைக் குட்டிகள் சகிதமாகக் கதை கட்டி, கோயில் திருவிழா என்ற பெயரில் சுரண்டல் தொழிலை நடத்துவதோடு, அதிலும் ஜாதிப் பிளவுகளை ஏற் படுத்தி, உன் கடவுள், என் கடவுள் என்று பேதப்படுத்தி, மக்கள் மத்தியில் மாச்சரியங் களையும், மோதல் போக்கு களையும் உண்டாக்குகிறார் கள் என்றால், இதன் தன்மை என்ன?

வைதிகரும், வைணவரு மான ராஜகோபாலாச்சாரி யாரே (ராஜாஜியே) முதல மைச்சராக இருந்த நிலை யிலே ஒரு உண்மையை ஒப்புக்கொண்டார்.

நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக் தர்களின் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா என்ற சண்டைகள்தான் அதிகம் என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார் (சென்னை தமிழிசைச் சங்கத் திறப்பு விழாவில், 15.4.1953).

விழுப்புரம் பல்லவராய புரத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் சாமி ஊர்வலம் வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மகேசன் விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்தான் தலை யிடவேண்டுமோ!

என்ன, மகேசனோ, மண் ணாங்கட்டியோ!

மயிலாடன்
www.viduthalai.com

புதன், 11 ஆகஸ்ட், 2010

எல்லாம் அவன் செயலா? இது எவன் செயல்?



நாகை: திருமருகல் கோவிலில் பல லட்சம் மதிப்புள்ள 3 கடவுள் சிலைகள் கடத்தல்



திருமருகல், ஆக.8- நாகை மாவட்டம், திரு மருகல் ஒன்றியம், திருப்பு களூர் கிராமத்தில் அமைந் துள்ளது அக்னீஸ்வரர் கோயில். இக்கோயிலில் பல்வேறு மாவட்டங் களிலிருந்தும் வெளி மாநிலங்களி லிருந்தும் சில நேரங்களில் வெளி நாட்டினரும் இக்கோ யிலுக்கு வந்து செங்கற் களை வைத்து வாஸ்து பூஜை என்ற பெயரில் பூசைகள் நடத்தி அந்த செங்கற்களை சாக்கில் வைத்து கட்டி எடுத்துச் செல்வது வழக்கமாம்.

மேலும் இக்கோயிலில் நேற்று (7.8.2010) மகா பிரதோஷம் என்ற பெய ரில் பூஜைகள் நடந்த தாம். இந் நிலையில் இக்கோயி லில் கடந்த 2003 ஆம் ஆண்டு கோயில் வளாகத் திலேயே கண் டெடுக்கப் பட்ட 27 அய்ம் பொன் சிலைகள் இரும்புக் கம்பி வேலிக்குள் அடைக் கப்பட்டு கோயில் நிரு வாகத்தினரால் பாது காக்கப்பட்டு வருகிறது.

இச்சிலைகளில் மூன்று சிலைகள் மட்டும் திடீ ரென காணாமல் போய் விட்டதாக கோயில் நிரு வாகம் கூறுகிறது. இந்தச் சிலைகளின் மதிப்பு பல லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இதுபற்றி இப்பகுதியில் பொது மக்கள் கூறும் போது இக்கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பாக வைத்திருக்கும் இடம் இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு இரண்டு பூட்டுகள் கோயில் நிரு வாகத்தால் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரு கிறது. இந்த கோயில் பூட்டு கள் உடைக்கப்பட்டோ, அல்லது சேதப்படுத்தப் பட்டோ இல்லையாம். ஆனால் இரண்டு பூட்டு களும் எவ்வித சேதாரமும் இல்லாமல் பூட்டப்பட்ட நிலையி லேயே உள்ளதாம். எனவே இந்த சாமி சிலை கள் வெளியூரில் இருந்து எவரேனும் எடுத் திருக்க முடியாது என்றும், கோ யில் நிருவாகமே இதனை செய்துவிட்டு திருட்டுப் போனதாக அறிவிக்கிறது எனவும் பொது மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக திட்டச்சேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவனின்றி ஓரணுவும் அசையாதே அப்படி யானால் இந்த 3 பகவான் களையும் கடத்தியது எவன் செயல்?