ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மறுபிறப்பா?





சைலர்ட் (CYLERT) என்ற வணிகப் பெயருள்ள மருந்து ஒன்று விலங்குகளின் கற்கும் திறன்களை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இதை உருவாக்கி உள்ளவர்கள் அய்க்கிய அமெரிக் காவைச் சேர்ந்த அபட் ஆய்வகத் தார் (லேபரட்டரீஸ்). நினைவுத் திறனுக்கு ஆர்என்ஏ ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக் னீசியம் பெமோலைனின் செயல் பாட்டால் மூளையின் நரம்பணுக் களில் ஆர்என்ஏ அதிக வேகமாக உருவாக்கப்படுகிறது. இந்த அதி கரித்த வேகமே, இம்மருந்தால் நினைவுத்திறன் அதிகரிப்பதற்கு காரணம் என கருதுகிறார் டாக்டர் கிளாஸ்கி .

மறுபிறவி பற்றி ஆய்வு நடத்தும் நம்மூர்க்காரர்களுக்கு இந்த செய்தி மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடும். நம் பையன் களுக்கும் பெண்களுக்கும் சைலர்ட் கொடுப் பதன் மூலம், அவர்கள் தம் முற்பிறவிகள் பற்றி அதிகமதிகம் நினைவுகூர உதவ முடியும். சைலர்ட்டை கூடுதலாக கொடுப்ப தன்மூலம் பெரியவர்கள்கூட தம் முற்பிறவி நிகழ்ச்சிகளை நினைவு கூரச் செய்ய முடியும்.

மூளை நரம்பணுக்களில் உள்ள ஆர்என்ஏ மூலக்கூறுகள்தான் நினைவுத் திறனின் அடிப்படை ஆகும். என்றால், சாவுக்குப்பின் மூளை சிதைந்த பிறகு நினைவு மட்டும் எப்படி தங்கி இருக்க முடியும்? அப்படியானால் முற் பிறவிகளின் நினைவுகள் என அடிக்கடி கூறப்படும் கதை களுக்கு இனி நாம் என்ன மதிப்பு தர முடியும்?

மூன்று ஆண்டு எட்டு மாதம் வயதான சிறுபெண் ஆலிவ் சாமலதா ரஞ்சிபிரேமா, தன் முற்பிறவியில் தனக்கு பெற்றோ ராக இருந்தவர்களின் வீட்டை சுட்டிக் காட்டியதும் அவளது இப்பிறவிப் பெற்றோருக்கு முதலில் பிரமிப்பே ஏற்பட்டது. அந்த வீட்டில்தான், தன் தாய் தந்தையர் வசித்தனர் என்று அவர்களிடம் அவள் கூறினாள். இன்னொரு நாள் ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி, தன் முந்திய பிறவியில், தான் அவளைப் போல்தான் இருந்ததாக தெரிவித்தாள். (த.சன்).

உள்ளூரைச் சேர்ந்த ஒரு சிறுமி, தேகிவாலா விலங்குக் காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளில் ஒன்றை சுட்டிக் காட்டி தன் முந்திய பிறவியில், தான் அதைப் போலவே இருந்த தாகக் கூறும் சுவையான கதையைக் கேட்க இன்னும் நாம் காத்துக் கொண்டிருக் கிறோம்! தன் முற்பிறவியில், தான் ஒரு விலங்காக இருந்த தாக தன் நினைவுகளில் இருந்து கூர்ந்து கூற முடிகிற ஒரே ஒரு குழந்தையைக்கூட இன்னும் நம் மறுபிறப்பு ஆராய்ச்சிக்காரர்கள் எவரும் சந்திக்க முடியாதது ஏனோ?

மறுபிறப்பு பற்றி விளக் கங்கள் அளிப்போரிடம் நாம் கேட்பது என்னவென்றால், ஆலிவும் முன்பிறப்பில் அவள் யாரைப் போல் இருந்தாளோ அந்த மற்ற பெண்ணும் ஒரே பிறவியில் பிறக்க முடிந்தது எப்படி? அப்படியானால் ஒரே ஆளே, அவர் இறந்தபின் இரட் டைப் பிறவிகளாய் அன்றி இரண்டு வெவ்வேறு ஆள் களாக திரும்பப் பிறப்பது சாத் தியமா?

டாக்டர் ஏ.டி.கோவூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக