வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சண்டை!



அனைவரையும் படைத் தவர் கடவுள் என்கின்றனர் அப்படிப் பார்க்கும்பொழுது கடவுள் அனைவருக்கும் தகப்பன் ஆகிறார்.

உண்மையான தகப்ப னார் தன் பிள்ளைகளை வேறுபடுத்திப் பார்ப்பாரா? அப்படிப் பார்த்தால் அவர் யோக்கியமான தகப்பனாகத் தான் மதிக்கப்பட முடியுமா?

நாட்டில் என்ன நடக் கிறது. ஒரு கட்டத்தில் கோயி லுக்குள் தாழ்த்தப்பட்டவர் கள் போகக்கூடாது என்று தடை போட்டார்கள். அதற் காகப் போராட்டம் நடத்தப் பட்டு, அந்த உரிமை கிடைக்கப் பெற்றது.

குறிப்பிட்ட ஜாதியினர் தான் சாமியைத் தொட முடியும், குளிப்பாட்ட முடியும், பூஜை செய்ய முடியும் என்று சுவர் எழுப்பி வைத்தனர்.

அதனை உடைக்க அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் சட்டம் திராவிடர் கழகத்தின் முயற்சியால், தி.மு.க. ஆட்சி யில் இயற்றப்பட்டு, அனைத்து ஜாதியினருக்கும் 69 சத விகித இட ஒதுக்கீடு அடிப் படையில் பயிற்சியும் அளிக் கப்பட்டு, இந்துக் கோயில் கருவறைக்குள் இந்து மதத் தைச் சேர்ந்த எந்த ஜாதி யினரும் அர்ச்சகராக ஆணை பிறப்பிக்கப்படவி ருந்த ஒரு காலகட்டத்தில், அதனையும் எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டனர் பிரம்மாவின் முகத்தில் பிறந்ததாகத் தங்களுக்குத் தாங்களே எழுதி வைத்துக் கொண்ட பார்ப்பனர்கள்.

ஏடுகளில் ஒரு சேதி இன்று வந்தது. பண்ருட்டி வட்டம் பல்லவராயநத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு முத்துமாரியம்மன் சாமி ஊர்வலம் செல்லத் தடையாம்.

கோயிலுக்குமுன் வைக் கப்படும் மரத்தால் ஆன முத்துமாரியம்மனை வேண்டு மானால் தாழ்த்தப்பட்டவர்கள் கும்பிட்டுத் தொலையலாமாம். சாமி சிலையில்கூட மற்றவர் களுக்கு உலோகத்தால் ஆனது; தாழ்த்தப்பட்டவர் களுக்கு மரத்தால் ஆனதாம்.

அடேயப்பா, இந்தக் கடவு ளைப்பற்றி எப்படி எப்படியெல் லாம் குலுக்கி மினுக்கி எழுதித் தள்ளியுள்ளார்கள்? அன்பே உருவானவர் காருண்ய மூர்த்தி, சகல உயிர்களையும் படைத்த சக்தி படைத்தவர் உருவமற்றவர் அரூபி என்று ஒரு பக் கத்தில் கிறுக்கி வைத்து விட்டு, இன்னொரு பக்கத் தில், கடவுளுக்கு உருவம் வைத்து பெண்டாட்டி, வைப் பாட்டிகள் என்று ஏற்பாடு செய்து, குழந்தைக் குட்டிகள் சகிதமாகக் கதை கட்டி, கோயில் திருவிழா என்ற பெயரில் சுரண்டல் தொழிலை நடத்துவதோடு, அதிலும் ஜாதிப் பிளவுகளை ஏற் படுத்தி, உன் கடவுள், என் கடவுள் என்று பேதப்படுத்தி, மக்கள் மத்தியில் மாச்சரியங் களையும், மோதல் போக்கு களையும் உண்டாக்குகிறார் கள் என்றால், இதன் தன்மை என்ன?

வைதிகரும், வைணவரு மான ராஜகோபாலாச்சாரி யாரே (ராஜாஜியே) முதல மைச்சராக இருந்த நிலை யிலே ஒரு உண்மையை ஒப்புக்கொண்டார்.

நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக் தர்களின் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா என்ற சண்டைகள்தான் அதிகம் என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார் (சென்னை தமிழிசைச் சங்கத் திறப்பு விழாவில், 15.4.1953).

விழுப்புரம் பல்லவராய புரத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் சாமி ஊர்வலம் வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மகேசன் விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்தான் தலை யிடவேண்டுமோ!

என்ன, மகேசனோ, மண் ணாங்கட்டியோ!

மயிலாடன்
www.viduthalai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக