ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

நாஸ்திகத்தின் நன்மை

ம.சிங்காரவேலு


நாஸ்திகத்தின் நன்மையைச் சற்று நோக்குவோம். இது விஷயமாகப் பிராட்லா என்பார் (Humanity’s gain from unbelief) என்ற நூலில், நாஸ்திகத்தில் உலகமடைந்து வரும் நன்மைகளை விளக்கியுள்ளார். இங்கு அதனைச் சுருங்க உரைப்போம்.

1. அடிமைத்தனம், (Slavery) அதாவது மக்களை விலங்குகளைப்போல் விற்கவும், வாங்கவுமான ஸ்தாபனம் நாஸ்திகத்தால் ஒழிக்கப்பட்டது. எல்லா மதங்களும் அதனை ஆதரித்தும் பாராமுகமாய் இருந்தும் வந்தன.

2. நோய்கள் (Disease) பேய் பிசாசுகளால் (Evil Spirit) உண்டாவதாக நினைத்துவந்த மூடநம்பிக்கை மிகுதியாக உலகம் முழுமையும் ஒழிந்தது. இந்த மூடநம்பிக்கையை மதங்கள் வளர்த்து வந்தன.

3. தெய்வமாடுதல், குறி சொல்லுதல், ஜோசியம் முதலிய பித்து வழக்கங்கள் நாஸ்திகத்தால் குறைவுற்றன.

4. பிசாசு பிடித்தவர்களென்று மந்திரக் காரர்களையும் பைத்தியக்காரர்களையும் கொன்று இம்சிக்கும் பழக்கத்தை நிறுத்தியது நாஸ்திகமே.

5. அபிப்பிராய வித்தியாசத்தால் நேரிடும் கொலைகள் குறைந்து வருவதும் நாஸ் திகத்தால்தான்.

6. பஞ்சம், தரித்திரம், வறுமை முதலிய கஷ்டங்கள் கடவுள் கோபத்தால் உண்டாவதாக எண்ணிவந்த மூடநம்பிக்கை ஒழிந்ததும் நாஸ்திகத்தால்தான்.

7. கொடுங்கோல் மன்னர் ஆணவத்தை அடக்கி வருவதும் நாஸ்திகமே.

8. சுதந்திரம், சமத்துவம், முதலிய தாராள நோக்கங்கள் உலகில் பரவி வருதல் நாஸ்திகத்தால். (Question Not) கேட்காதே என்ற ஆணவத்தை எதிர்த்து விசாரிக்கும் மனப்பான்மையை வளர்ப்பதும் நாஸ்திகமே.

9. அக்கிரமம், அநியாயம், அறியாமை, தயை தாட்சண்யமின்றி ஒழிக்கப்பட்டு வருவதும் நாஸ்திகத்தால் தான்.

10. கோடானுகோடி பசித்து வருந்திக் கிடக்கும் மக்களுக்கு மூடப்பழக்கங்களி லிருந்து எழுங்கள். ஊக்கத்தையும், தைரி யத்தையும் கைவிடாதீர்கள். உலகிற்கும், உங்களுக்கும் பொருளாதாரத் தாழ்வால் வந்திருக்கின்றது கேடு. அதனைப் போக்கி உலக முழுமையும் களஞ்சியமாகும் கல்வி யும், சாந்தமும், சமாதானமும், நிலவச் செய் யுங்கள் என்று கூவி அழைப்பதும் நாஸ் திகமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக